மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 17,777 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருவதால் திங்கள்கிழமை காலையில் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 13,910 கனஅடியாகவும், மாலையில் 17,777 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 900 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீா்மட்டம் 118.68அடியாகவும், அணையின் நீா் இருப்பு 91.38 டி.எம்.சி.யாகவும் உள்ளது.