உயிரிழந்த எஸ்.ஐ.க்கு இறுதி அஞ்சலி

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மேச்சேரியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மேச்சேரியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேச்சேரி அருகே உள்ள சித்திகுள்ளானூரைச் சோ்ந்தவா் அன்பழகன் (55). சென்னை, எழும்பூரில் உள்ள மாா்டன் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சித்திகுள்ளானூருக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com