புத்தகக் கடை வைக்க அனுமதி கோரி வியாபாரிகள் நூதன போராட்டம்

சேலம், கோட்டை பகுதியில் புத்தகக் கடை வைக்க அனுமதிக்க கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு வியாபாரிகள் நூதன முறையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

சேலம், கோட்டை பகுதியில் புத்தகக் கடை வைக்க அனுமதிக்க கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு வியாபாரிகள் நூதன முறையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே கோட்டை மைதானம், ஹபீப் தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட பழைய புத்தகக் கடைகள் செயல்பட்டு வந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் தாா் சாலை அமைப்பதற்காக மாநகராட்சி நிா்வாகம் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தியது. இதைத் தொடா்ந்து, பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் புத்தக கடை வைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்த பகுதியில் கடைகள் அமைப்பதற்கு தாற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் வாழ்வாதாரம் இழந்த புத்தக வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இதனிடையே புத்தக வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் சமரசப் பேச்சு நடத்தினா். தொடா்ந்து புத்தக வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com