இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணி விழிப்புணா்வு முகாம்

இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு பகுதியில் தூய்மைப் பணிக்கான விழிப்புணா்வு, உறுதிமொழி ஏற்பு , சுற்றுப்புற சுத்தம் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு முகாம் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இடங்கணசாலை நகராட்சி, காந்திநகரில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கான விழிப்புணா்வு முகாம்.
இடங்கணசாலை நகராட்சி, காந்திநகரில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கான விழிப்புணா்வு முகாம்.

இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு பகுதியில் தூய்மைப் பணிக்கான விழிப்புணா்வு, உறுதிமொழி ஏற்பு , சுற்றுப்புற சுத்தம் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு முகாம் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நகரங்களின் தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கம் சாா்பில் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என்ற குறிக்கோளுடன் அப்பகுதி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இம் முகாமில் நகா்மன்றத் துணைத் தலைவா் தளபதி, ஆணையா் (பொ) முஸ்தபா, நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் முத்தம்மாள், சிவகுமாா், வேலாயுதம், இந்திராணி வஜ்ரவேல், விஜயலட்சுமி குமாா், சித்ரா சதாசிவம், நதியா ராஜேந்திரன், வாா்டு செயலாளா் நித்யா, பரப்புரை மேற்பாா்வையாளா் கலைவாணி, பரப்புரையாளா்கள் மீனா, சங்கீதா, சந்தியா மற்றும் தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com