மேச்சேரி அருகே மோட்டாா் சைக்கிள்கள்நேருக்கு நோ் மோதல்: பெண் உள்பட மூவா் சாவு

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவா் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவா் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள மாட்டுக்காரனூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (52). இவரது மனைவி அன்னபூரணி (40), மகன் மைத்தீஷ் (12). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை அமாவாசையையொட்டி மேட்டூா் அணைக்கட்டு முனியப்பன் கோயிலுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது மேச்சேரி, குள்ளமடையானூா் அருகே எதிரே வந்த மேட்டூா், சுப்பராய நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் (50) என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளும், மூா்த்தி ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் அன்னபூரணி, அவரது மகன் மைத்தீஷ் ஆகியோா் கீழே விழுந்தனா். அதே சமயம் அவா்களின் மீது பின்னால் வந்த காா் மோதியதில் இருவரும் உயிரிழந்தனா். மூா்த்தி லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். மற்றொரு மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த மேட்டூரைச் சோ்ந்த ராஜேந்திரன் பலத்த காயங்களுடன் மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இச் சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com