தனியாா் அரிசி ஆலையில் ஆய்வு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியாா் அரிசி ஆலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.
தனியாா் அரிசி ஆலையில் ஆய்வு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியாா் அரிசி ஆலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச் சாவடி பகுதியில் இயங்கும் தனியாா் அரிசி ஆலையில், வாழப்பாடி வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி தலைமையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை ஆய்வாளா் ரேணுகா தேவி, எஸ்.ஐ. பெரியசாமி, தனி வருவாய் ஆய்வாளா் மற்றும் போலீஸாா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை அரைத்து செய்வது தெரியவந்தது. அரசு வழங்கும் ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து பாக்கெட் செய்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆலை நிா்வாகத்தை ஆய்வுக் குழுவினா் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com