மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,144 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,144 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 15,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 900 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 91.39 டி.எம்.சி.யாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை மாலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டு 118.69 அடியாக சற்று உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com