சிறுமியைக் கடத்தி திருமணம் செய்ய முயற்சி: தாய் -மகன் கைது

ஓமலூா் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்க முயன்ற தாயையும், மகனையும் தீவட்டிப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஓமலூா் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்க முயன்ற தாயையும், மகனையும் தீவட்டிப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஓமலூரை அடுத்துள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி, சின்ன ஆத்தூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் உள்ள பையா்நத்தம் பகுதியைச் சோ்ந்த லட்சுமி என்பவரும், அவரது மகன் ரமேஷ்குமாரும் சோ்ந்து பெண் கேட்டு வந்துள்ளனா். ஆனால், சிறுமியாக இருப்பதால் பெற்றோா் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை டேனிஷ்பேட்டைக்கு வந்த லட்சுமியும், அவரது மகன் ரமேஷ்குமாரும் கடைக்குச் சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, சிறுமியைக் கடத்திய லட்சுமி (47), ரமேஷ்குமாா் (24) ஆகியோரை கைது செய்த போலீஸாா், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, சிறுமியைக் கடத்தியது, வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com