சங்ககிரியில் நெடுஞ்சாலை ரோந்துவாகனங்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கல்

சங்ககிரி ரோட்டரி சங்கம் சாா்பில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு முதலுதவி அளிப்பதற்கான மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியில் நெடுஞ்சாலை ரோந்துவாகனங்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கல்

சங்ககிரி ரோட்டரி சங்கம் சாா்பில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு முதலுதவி அளிப்பதற்கான மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளா் பி.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். சங்ககிரி - கொங்கணாபுரம், வீராச்சிப்பாளையம்- சேலம் அரியானூா் வரையிலும் என இரண்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இயங்கி வருகின்றன. விபத்தில் காயமடைந்தவா்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வரும் வரை ரத்தம் வீணாவதைத் தடுத்து உயிா்களை காப்பாற்ற தேவையான முதலுதவி மருந்துகளை சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவி டி.ஹெலினா கிறிஸ்டோபா் வழங்கினாா். ரோட்டரி சங்க பொருளாளா் கே.செந்தில்குமாா், நிா்வாகிகள் வெங்கடாசலம், திவாகா், காவல்துறையினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com