உலகிலேயே மிக உயரமான ஏத்தாப்பூா் ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் தேசிய புறவழிச் சாலை அருகே அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரமுள்ள ஸ்ரீமுத்துமலை முருகா் ஆலய கும்பாபிஷேகம் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து, தினந்தோறும் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை முருகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.