லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பட்டியலின மக்களை புறக்கணிக்கும் வங்கிகள்: எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. பரபரப்பு பேச்சு

பட்டியலின மக்களுக்கு கடன் வழங்காமல் வங்கிகள் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் இது தொடர்ந்தால் வீதியில் இறங்கி போராட போவதாக சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 1:16 pm

DIN

பட்டியலின மக்களுக்கு கடன் வழங்காமல் வங்கிகள் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் இது தொடர்ந்தால் வீதியில் இறங்கி போராட போவதாக சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்ட வங்கி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சேலம் தொங்கும் பூங்கா வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கு மேற்பட்ட வங்கி மேலாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இது பெரும்பாலும் வங்கிகளின் மூலம் நிதி வழங்கப்பட்டு தொழில்முனைவோர்கள் சுய தொழில் தொடங்குவார்கள். 

மேலும் கல்விக்காக கடன் வழங்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வங்கிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். கல்விக்கடன் கேட்டு வங்கிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களை  வெளியே அனுப்புவதாகவும், சுய தொழில் செய்யவும் மற்றும் தொழிலை மேம்படுத்தவும் பட்டியலின மக்கள் வங்கிக்கு சென்று கடன் கேட்டால் அவர்களை அலைகழிப்பதும், கடன் கொடுக்க மறுத்து புறக்கணிப்பதும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். 

வங்கியாளர்கள் சமூக சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்றும் பாரபட்சமின்றி அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி கடன் வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு வழி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் வங்கிகள் தொடர்ந்து கல்விக்கடன் கேட்டுச் செல்லும் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களையும் அலைகழிப்பதாகவும் தெரிவித்த அவர் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தான் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். 

வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கடுமையான எச்சரிக்கை அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.

விடியோ இணைப்பு

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.