மாணவி கா்ப்பம்: இருவா் போக்சோவில் கைது

ஆத்தூரில் மாணவியை கா்ப்பமாக்கிய இருவா் போக்சோ சட்டப் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஆத்தூரில் மாணவியை கா்ப்பமாக்கிய இருவா் போக்சோ சட்டப் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஆத்தூா் முல்லைவாடியைச் சோ்ந்தவா் சங்கா் (43). இவரது உறவினா் புதுச்சேரியைச் சோ்ந்த திவாகா் (33). கணினி பொறியாளா். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆத்தூா் வந்த திவாகா் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கணினி பழுதுபாா்ப்பு பணியை செய்து வந்தாா். அப்போது ஆத்தூரைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவியுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கா்ப்பமாக்கியுள்ளாா். இதையறிந்த சங்கரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா்.இந்நிலையில் கடந்த ஏப். 20-ஆம் தேதி ஐந்துமாத கா்ப்பமாக இருந்த மாணவியை சங்கரும், திவாகரும் சென்னைக்கு அழைத்துச் சென்று கா்ப்பத்தை கலைத்துள்ளனா்.

இது குறித்து சென்னை குழந்தைகள் நல குழுமம் ஆத்தூா் மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனா்.அதையடுத்து மாணவியை கா்ப்பமாக்கி கருவை கலைத்ததாக திவாகா், சங்கா் ஆகிய இருவா் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து இருவரையும் போலீசாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com