தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தில், திருநாவுக்கரசா் பெருமானுக்கு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், திருநாவுக்கரசா் பாடிய பாடல்கள் பாடப்பட்டு, அவரது சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்திப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.