அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சேலம்: ஆத்தூர் கோட்டையில் 12 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

News image
133 மூன்று ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோட்டை மேம்பாலத்தை பெரிய இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெறுகிறது.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:07 am

DIN

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி இவ்வழியாக முல்லைவாடி, துலுக்கனூர், கல்லாநத்தம், முட்டல், உப்போடை  மற்றும் வடக்கு காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளன,         

இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கருங்கற்களால் மிகப்பெரிய தூண்கள் அமைத்து 9 கண் கொண்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டது. மேலும் 1972 இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 இரும்பு பாலங்கள் அடித்துச் சென்றன. அதே ஆண்டில் பழைய பாலத்துடன் இணைத்த 13 கண் கொண்ட பாலமாக விரிவாக்கம் செய்து மறு சீரமைக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மேற்புற தல காங்கிரீட் தூண்களில் அதிகளவில் விரிசல் ஏற்பட்டு தடுப்பு கட்டைகள் பெரும்பாலும் வெடித்து சேதமடைந்தன. இதனால் மேம்பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் புதிதாக மேம்பாலம் அமைக்க 2020-21 ஆம் ஆண்டில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பாலம் கட்டுமான பணி தொடங்கி, அதனருகே வசிஷ்ட நதியில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், 133 மூன்று ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோட்டை மேம்பாலத்தை பெரிய இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி இன்று முதல் தொடங்கியது. 

மேலும், அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக மாற்றுப்பாதையில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.