மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 42,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 42,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 42,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் கனமழை பெய்து வருவதால், கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 42,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூா் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

அணையில் உள்ள சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 18,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 120.10அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து 42,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 41,000 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.63 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com