மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியாக நீடிக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆகஸ்ட் 15) காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 85,000 கனஅடியிலிருந்து 65,000 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைத் தணிந்ததால் 4-வது நாளாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியிலிருந்து 65,000 கன அடியாக குறைந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு  85,000 கன அடியாக உள்ளது. 

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 42,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com