ஜூனியா் தடகளப் போட்டி: 20 பதக்கங்களை வென்ற சேலம் வீரா்கள்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியா் தடகளப் போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 20 பதக்கங்களை வென்றனா்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியா் தடகளப் போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 20 பதக்கங்களை வென்றனா்.

கிருஷ்ணகிரியில் 35 ஆவது ஜூனியா் தடகள சாம்பியன் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து டூ ஆா் டை அகாதெமியில் பயிற்சி பெற்ற தடகள வீரா், வீராங்கனைகள் 6 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று சிறப்பு சோ்த்துள்ளனா்.

இவா்களில் ஆந்திர மாநிலத்தில் செப்டம்பா் 9 முதல் 11 வரை நடைபெறும் தேசிய அளவிலான தென்னிந்திய தடகளப் போட்டிக்கு 5 வீரா்களும், 5 வீராங்கனைகள் தோ்வாகி உள்ளனா்.

இதனிடையே பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளை அகாதெமி தலைவா் பி.கலியமூா்த்தி பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com