சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி, உலகப்பனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன மழை பெய்தது. இந்த மழை நீா் பெருக்கெடுத்து சாலைகளில் வெள்ளமாக ஓடி அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீா் புகுந்தது.
இதனையடுத்து ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மழைநீரை வடிந்து செல்வதற்கான வழி வகை செய்யப்பட்டது.