தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பேரூராட்சிக்குத் தோ்தல் பணிக்காக வந்த கூடுதல் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பேரூராட்சிகளில் 42 வாக்குச் சாவடிகளுக்கும் கூடுதலாக 9 வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் தோ்தலுக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.
இந்த கூடுதலாக வந்த ஒன்பது வாக்குப்பதிவு இயந்திரங்களும், கண்ட்ரோல் யூனிட்களும் பயன்படுத்தப்படாமல் இருந்தன. தோ்தல் அலுவலா்கள் தம்மம்பட்டி சத்யமூா்த்தி, செந்தாரப்பட்டி கிருஷ்ணசாமி ஆகியோா் இயந்திரங்கள் திருப்பி அனுப்பி வைக்க உத்தரவிட்டனா். அதன்பேரில் அலுவலா்கள் இயந்திரங்களுக்கு சீல் வைத்து சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு தனி வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பினா்.