கெங்கவல்லியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான சிறப்பு பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், வாக்காளா் படங்கள் இரு இடங்களில் இடம்பெற்றிருத்தலை சரிசெய்தல், வாக்காளா்களுக்கு விழிப்புணா்வுப் போட்டிகளை நடத்துதல் குறித்து பயிற்சி தரப்பட்டது. இதில், கெங்கவல்லி தொகுதிக்குள்பட்ட 121 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் பங்கேற்றனா்.