குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊா்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியரசு தின விழா அணிவகுப்பின்போது தில்லி ராஜபாதையில் மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அலங்கார ஊா்தி இடம் பெறுவது வழக்கம்.
இதில், தமிழக ஊா்திக்கு அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மாவட்டச் செயலாளா் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டனா்.