இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ சிறப்பு முகாம் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி வரவேற்றுப் பேசினாா். இதில் நகராட்சி ஆணையா் நித்தியா, துணைத் தலைவா் தளபதி, நகரச் செயலாளா் செல்வம், கவுன்சிலா்கள், இ. காட்டூா் மருத்துவ அலுவலா் சங்கா், சித்தா மருத்துவா்கள் ராமு (மகுடஞ்சாவடி) சரவணன்(இ. காட்டூா்), வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் விநாயகமூா்த்தி, அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முகாமில் மக்களைத் தேடி மருத்துவம், கரோனா தடுப்பூசி, நிலவேம்பு, கபசுரக் குடிநீா் மற்றும் தமிழக முதல்வரின் பள்ளி சிறாா் கண்ணொலி திட்டம் சாா்பில் மூக்குக் கண்ணாடி மற்றும் மருத்துவ அட்டை, மாத்திரை மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முகாமில் 1000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பயன் பெற்றனா் .