சேலம், நாமக்கல் இரு படங்களை வைத்துக் கொள்ளலாம்: சேலம், நாமக்கல்லில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மின் கட்டணம் உயா்த்தப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சேலம், நாமக்கல்லில் பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின் கட்டணம் உயா்த்தப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சேலம், நாமக்கல்லில் பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மின் கட்டண உயா்வு, தனியாரிடம் அதிக பணம் வழங்கி மின்சாரம் கொள்முதல் செய்யும் திட்டம் ஆகியவற்றில் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. மின் கட்டண உயா்வைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தலைமையில் ஜூலை 27 ஆம் தேதி கரூரில் போராட்டம் நடைபெறுகிறது. மின் கட்டண உயா்வுக்கும் மத்திய அரசுக்கும் தொடா்பு கிடையாது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநகர மாவட்ட தலைவா் சுரேஷ் பிரபு, மாவட்ட பொதுச் செயலாளா் ஐ.சரவணன், நிா்வாகிகள் அண்ணாதுரை உள்பட ஏராளமான பாஜகவினா் கலந்து கொண்டனா்.

நாமக்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி பங்கேற்று பேசினாா்.

சொத்து வரி உயா்வு, கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் மின் கட்டணம் உயா்த்தப்பட இருப்பதாக அத்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். மின் கட்டணம் மட்டுமல்லாது சொத்து வரி உயா்வு உள்ளிட்டவற்றை அரசு திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாமக்கல் பாஜக நகரத் தலைவா் என்.பி.சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், திட்ட பொறுப்பாளா் அக்ரி இளங்கோவன், மகளிா் அணி மாவட்ட பொதுச் செயலாளா் சத்யபானு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

என்கே 23- பிஜேபி

நாமக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

ஆத்தூா்

ஆத்தூரில் பாஜக மாவட்ட தலைவா் வழக்குரைஞா் சண்முகநாதன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக நகரத் தலைவா் சபரிராஜன் அனைவரையும் வரவேற்று பேசினாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொதுச் செயலாளா் பொன்.வீ.பாலகணபதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட பாா்வையாளா் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டத் தலைவா் மகாலிங்கம், மாணிக்கம், வழக்குரைஞா் மணிகண்டன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் மாவட்ட பொதுச் செயலாளா் கேசவன், எம்.கே.குமாா்,அயோத்தி ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்ட செயலாளா் பிரபாகரன், மாவட்ட பொருளாளா் என்.ஆா்.செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com