அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருப்பது கவலையளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருப்பது கவலையளிக்கிறது  என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருப்பது கவலையளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

சேலம்: அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருப்பது கவலையளிக்கிறது  என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மற்றும் சேலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று சேலம் வந்திருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இன்று காலை தனியார் விடுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

பாமக 2.0 என்ற புதிய செயல் திட்டத்தில் கல்வி , மேலான்மை, சுற்றுச்சூழல், போதை ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம் போன்றவைகளை முன் நிறுத்தி கட்சியை வழி நடத்துவேன். அதைபோலவே கட்சி நிர்வாகிகளும் நடந்துகொள்வார்கள் என்று கூறினார்.

சேலத்தில்  பல முக்கிய பிரச்சனைகள் உள்ளது அதில் ஒன்று 20 ஆண்டுகாலமாக மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆண்டுதோறும் 40 டிஎம்சியில் இருந்து  120 டிஎம்சி வரை தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. காலநிலை மாற்றத்தை நோக்கி சென்று வருகிறோம். எதிர்காலத்தில் மக்கள் மிக மோசமான காலநிலை மாற்றத்தை சந்திக்க உள்ளோம். கடத்த ஆட்சி காலத்தில் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்டது.  அதை மேட்டூரிலிருந்து ஆத்தூர் வரை கொண்டு செல்ல திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

சேலம் மாநகரில் குப்பைகள் நாள்தோறும் 500 டன் குப்பைகள் எறியூட்டபடுகிறது. குப்பைகளால் மாநகர மக்கள் பல ஆபத்தான விளைவுகளை சந்தித்து வருகின்றனர். கோப்புகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

தமிழகத்தை தாக்கிவரும் மது, போதை பொருள்கள், ஆன்லைன் மோசடி என் மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது.  தனக்கு தெரிந்து 9 மாதத்தில் 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு நிலத்தை திருப்பி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தலுக்கும் முன் மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக மூடப்படும் என தெரிவித்தார்கள். அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை இருந்தால் உடனடியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கலைஞரையும், மருத்துவர் அய்யாவையும் ஒருசேர பார்க்கிரேன். சமூக நீதிக்காக போராடியவர். இந்தியாவில் மிகப்பெரிய தலைவர் அவரை போற்றுவோம் என்றார்.

நீட் கொண்டு வந்த நோக்கமே கல்வி, வியாபாரம் ஆக கூடாது என்பதற்காகத்தான். ஆனால் இந்தியா முழுவதும் 1 லட்சம் கோடிக்கு மேல் பயிற்சி நிறுவனங்கள் மூலம் மோசடி நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் என கல்வி வணிகம் ஆக கூடாது என வருத்தம் தெரிவித்தார்.

நீட் தேர்வு வந்த பிறகும், தகுதியற்ற நபர்கள் கூட மருத்துவம் படிக்கும் அவலம் நிவிவருகிறது.  கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தில் கல்வி கட்டமைப்பை உருவாக்கவில்லை, அதனால் சிரிது காலம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து  விலக்கு  அளிக்க வேண்டும் என்றார். 

கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

ஆளுநருக்கும், முதல்வருக்கும் சமூக உறவு இருக்க வேண்டும். அதில் இருவரும் அரசியல் செய்யக் கூடாது. தமிழக மக்களின்  உணர்வுகளை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்திற்கு மேதாது அணையை எக்காரனம் கொண்டும் கட்டவிடமாட்டோம். தமிழகத்தில் அரசியல் செய்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று அதை தடுத்து நிறுத்துவாரா என கேள்வி எழுப்பினார்.

பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்றுவார்கள் என  நம்பி அரசு ஊழியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால்  அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் நிதி அமைச்சர் வெளிப்படையாக ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருப்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.

வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி ,  சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சதாசிவம், மாவட்ட செயலாளர்கள் ரத்தினம், விஜயராசா, ராஜசேகரன்,  பசுமை தாயக மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com