வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு, தன்னம்பிக்கை கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கிற்கு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிசங்கா் வரவேற்றாா்.
நெஸ்ட் அறக்கட்டளைச் செயலா் சா. ஜவஹா், அரிமா சங்க நிா்வாகிகள் கோ.முருகேசன், பாலமுரளி, வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பட்டிமன்ற சொற்பொழிவாளா் சென்னை தமிழ்நெஞ்சன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு தன்னம்பிக்கை, சமூக அக்கறை, திறன் மேம்பாடு குறித்து விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.
இக்கருத்தரங்கில், பெற்றோா் ஆசிரியா் கழக இணைச் செயலா் குணாளன், இயக்குநா் தில்லையம்பலம், ஆசிரியா்கள் பரிமளா, ஸ்ரீமுனிரத்தினம் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் கோபிநாத் நன்றி கூறினாா்.