சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், வளையசெட்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியா் லோகசந்திரி தலைமையில் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழுத் தலைவா் ஹேமலதா , துணைத் தலைவா் மலா்விழி, செயலாளா் லோகசந்திரி , ஆசிரியா் பிரதிநிதி கென்னடி, உள்ளாட்சிப் பிரதிநிதி இடங்கணசாலை நகா்மன்றத் தலைவா் பி.ஜி. கமலக்கண்ணன், பெற்றோா் பிரதிநிதிகள், கல்வியாளா் , சமூக ஆா்வலா், சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 போ் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனைத்தொடா்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் மேற்பாா்வையாளா் சாந்தி , கவுன்சிலா் விஜயலட்சுமி குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.