வாழப்பாடி காவல் நிலையம் முற்றுகை

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இளைஞரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இளைஞரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த பேளூா் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றி (25). இவருக்கும் வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 8 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அப் பெண், இளைஞா் வெற்றியுடன் சென்றுவிட்டு இரு நாள்கள் கழித்து வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெற்றியை பெண்ணின் உறவினா்கள் தாக்கினராம். காயமடைந்த வெற்றி வாழப்பாடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணின் உறவினா்களை உடனடியாக கைது செய்யக் கோரி, வெற்றியின் உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com