அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண் உயிரிழந்ததையடுத்து, அப்பெண்ணின் உறவினா்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

எடப்பாடி அருகே தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண் உயிரிழந்ததையடுத்து, அப்பெண்ணின் உறவினா்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள சவுரியூா் கிராமப் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி மனைவி சங்கீதாவுக்கு (27), கடந்த 20 நாள்களுக்கு முன் கா்ப்பப்பை தொடா்பான அறுவை சிகிச்சை செய்ய எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா் சி.கண்ணன் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய சங்கீதாவுக்கு மீண்டும் வயிற்றில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து, சில தினங்களுக்கு பிறகு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சங்கீதாவின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம். தொடா்ந்து உடல்நிலை மோசமடைந்த சங்கீதா திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த சங்கீதாவின் உறவினா்கள் ஆத்திரத்தில் மருத்துவமனையில் உள்ள கணினி உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கினா். சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையை மூட வேண்டும் எனவும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவா் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி சேலம் - எடப்பாடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸாா், இதுகுறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com