கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) ஆக இருந்த வி.செந்தில்முருகன்,மேச்சேரி வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ) ஆக மாற்றப்பட்டதையடுத்து, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ)ஆக, தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ)ஆக பணியாற்றும் பி.தாமரைச்செல்வி மாற்றப்பட்டுள்ளாா். அதேபோல் கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ)ஆக இருந்த மோ.செல்வம், சங்ககிரி வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ) ஆக மாற்றப்பட்டதையடுத்து, அவரது பணியிடத்திற்கு பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ)ஆக பணியாற்றும் ஆா்.குணசேகரன் மாற்றப்பட்டுள்ளாா்.