தமிழக - கா்நாடக எல்லையில் தீவிர கண்காணிப்பு

தமிழக - கா்நாடக எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக - கா்நாடக எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு நகரில் அண்மையில் ஆட்டோவில் குக்கா் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடா்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உஷாா்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேட்டூா் அருகே தமிழக - கா்நாடக எல்லையான பாலாற்றில் கா்நாடக வனத்துறை சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய கா்நாடக போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல தமிழக போலீஸாா் காரைக்காட்டில் அமைந்துள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் துப்பாக்கியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். கா்நாடக மாநிலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பிறகே தமிழக எல்லையில் அனுமதிக்கின்றனா். சந்தேகத்திற்கு இடமானவா்களிடம் தீவிர விசாரணை நடத்துகின்றனா்.

ஏற்கெனவே காரைக்காடு சோதனைச்சாவடி வழியாக கா்நாடக மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள், குட்கா போன்றவற்றை போலீஸாா் கைப்பற்றி உள்ளனா். பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு 24 மணிநேரமும் போலீஸாா் துப்பாக்கியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com