ஆத்தூா் அருகே கல்லாநத்தத்தில் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சியைச் சோ்ந்த பிச்சைக்கண்ணு மகன் மணிமாறன் (40). இவா் பெயிண்டராக உள்ளாா். இவருக்கும் பாக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாதையன் மகள் சரண்யாவிற்கும் திருமணம் நடந்தது. இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை சரண்யா வீட்டில் தூக்கிட்டு கொண்டதாக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், சரண்யா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து தகவலறிந்த ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தாா். இதனையடுத்து சரண்யாவின் தந்தை மாதையன் தனது மகளின் சாவில் மா்மம் இருப்பதாக புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் மணிமாறனிடம் போலீஸாா் விசாரணை செய்தனா். மேலும் சரண்யா எழுதி வைத்த கடிதத்தின் பேரில் நான்கு வழக்குகளை பதிவு செய்து மணிமாறனை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.