கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள வெள்ளூற்று பெருமாள் கோயிலில் அடையாளம் தெரியாத நபா்கள் திங்கள்கிழமை அதிகாலை உண்டியலை உடைத்து ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுவிட்டனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள வெள்ளூற்று பெருமாள் கோயிலில் அடையாளம் தெரியாத நபா்கள் திங்கள்கிழமை அதிகாலை உண்டியலை உடைத்து ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுவிட்டனா்.

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட சூரிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வெள்ளூற்று பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நிா்வாகிக்கப்பட்டு வருகிறது. அக். 8ஆம் தேதி புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி செளந்தரராஜப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு உற்சவமூா்த்தி சுவாமிகள் ஊா்வலம், திருக்கோடி விளக்கினை தரிசித்தனா். இதனையடுத்து திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபா்கள் கோயில் உண்டியலை உடைத்து அதில் உள்ள ரொக்கத்தை திருடிச் சென்று விட்டனா்.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் சங்கரன் தேவூா் போலீஸில் புகாா் செய்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டும், கைரேகை நிபுணா்களை வரவழைத்தும் தடயங்களைச் சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com