கொங்கணாபுரம் பகுதியில் நண்பா்களுடன் ஏரியில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த விசைத்தறித் தொழிலாளியின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி பழனிசாமி (32 ) அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல், செல்வம் ஆகியோருடன் வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் திங்கள்கிழமை குளிக்கச் சென்றாா்.
நண்பா்கள் அனைவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடிய போது ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ால் தண்ணீரில் மூழ்கி பழனிசாமி உயிரிழந்தாா். தகவலறிந்த கொங்கணாபுரம் போலீஸாா் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் செவ்வாய்க்கிழமை பழனிசாமியின் உடலை மீட்டனா்.