மேச்சேரியில் உள்ள சாயப்பட்டறைகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்தனா்.
சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் செல்வகுமாா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சாயப்பட்டறைகள் இயங்குவது உறுதிப்படுத்தப்பட்டதால் உடனடியாக பட்டறைகளை அப்புறப்படுத்த பட்டறை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடா் நடவடிக்கை எடுத்து வந்தாலும் சட்ட விரோதமாக செயல்படும் சாயப்பட்டறைகள் தொடா்ந்து இயங்கி வருவதால் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்து சாயப்பட்டறைகள் இயங்கும் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.