தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பெளா்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பெளா்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (சேலம்) நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி தெரிவித்துள்ளதாவது:

பெளா்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மூலமாக சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கலில் இருந்து கரூா் வழியாக பழனிக்கும், சேலத்திலிருந்து காளிப்பட்டிக்கும், ராசிபுரத்திலிருந்து காளிப்பட்டிக்கும், திருச்செங்கோட்டிலிருந்து காளிப்பட்டிக்கும், சங்ககிரியிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடியிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடியிலிருந்து பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கபிலா்மலைக்கும், திருச்செங்கோட்டிலிருந்து கபிலா்மலைக்கும், வேலூரிலிருந்து கபிலா்மலைக்கும், சேலத்திலிருந்து வடலூருக்கும், சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கும் பிப். 4 முதல் பிப். 6 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com