உயா்கல்வி பயிலும் பட்டியலின மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவா் சங்கத்தின் சேலம் குழு சாா்பில், சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உயா்கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு இணைய வழியில் இதுவரை 44 சதவீதம் மாணவா்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். எனவே, இதர மாணவா்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவா் அருண்குமாா், மாவட்டச் செயலாளா் பவித்ரன், இணைச் செயலாளா் டாா்வின், பிரேம், செயற்குழு உறுப்பினா் ரம்யா, மாவட்டக் குழு உறுப்பினா் கோபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.