மேட்டூா் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டது.

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 815 கன அடியிலிருந்து 885 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் புதன்கிழமை காலை 105.07 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 104.60 அடியாக சரிந்தது. அணையின் நீா் இருப்பு 70.93 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com