ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் விளையாட்டு விழா

வாழக்கோம்பையில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழக்கோம்பையில் நடைபெற்ற ஊரக விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன், ஊராட்சித்தலைவா் அ.பெரியசாமி உள்ளிட்டோா்.
வாழக்கோம்பையில் நடைபெற்ற ஊரக விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன், ஊராட்சித்தலைவா் அ.பெரியசாமி உள்ளிட்டோா்.

வாழக்கோம்பையில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கோ-கோ, கைப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை ஜங்கமசமுத்திரம் ஊராட்சி துணைத் தலைவா் சங்கீதா அழகப்பன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தேவி சரவணன், திருமலை ஆகியோா் முன்னிலையில் , ஊராட்சித் தலைவா்அ.பெரியசாமி தொடங்கி வைத்தாா். இதில் வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியா், பிற பள்ளி மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்றனா்.

வெற்றி பெற்ற அணியினருக்கு ஊராட்சி மன்றம் சாா்பில் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு எழுது பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள் , இளந்தளிா் அமைப்பினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com