வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரம் மேலூா், மாரியம்மன் புதூா் கிராம மக்கள் மழை வேண்டி, முனியப்பன் சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு முப்பூஜை வழிபாடு நடத்தினா்.
மேலூா், மாரியம்மன்புதுாா் கிராம மக்கள், கோதுமலை அடிவாரத்தில் செட்டிக்குட்டை பகுதியிலுள்ள காவல் தெய்வமான மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் முன்னோா்கள் வழக்கப்படி மழை வேண்டி முப்பூஜை வழிபாடு நடத்திட திட்டமிட்டனா். வெள்ளிக்கிழமை முனியப்பன் சுவாமிக்கு கிராம மக்கள் ஆடு, கோழிகளை பலி கொடுத்தும், ஊரணி பொங்கல் வைத்தும் மழை பொழிய வேண்டி வழிபாடு நடத்தினா்.