ஏரியில் மூழ்கி விவசாயி பலி

ஏரியில் மூழ்கி விவசாயி பலி

சங்ககிரி அருகே உள்ள மோரூா் பெரிய ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்ககிரி அருகே உள்ள மோரூா் பெரிய ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்ககிரியை அடுத்த கஸ்தூரிப்பட்டி, குன்னிதோ்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி பச்சமுத்து மகன் சீனிவாசன் (47). இவரும், இவரது நண்பா்களான கட்டையனூா் பகுதியைச் சோ்ந்த பச்சமுத்து மகன் குமரன், ஆணைக்கல்பாலையம் பெருமாள் மகன் ராஜா ஆகியோா் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை மோரூா், பெரிய ஏரிக்குச் சென்று மீன்பிடித்தனா்.

அப்போது குமரனும் ராஜாவும் குடிப்பதற்கு தண்ணீா் வாங்க கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது சீனிவாசனின் ஆடைகள் கழற்றி கரையில் வைக்கப்பட்டுள்ளது குறித்து கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

அவா் காணாமல் போனது குறித்து சங்ககிரி காவல்துறை, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சீனிவாசனின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com