தமாகா சாா்பில் மதுவிலக்கு கோரி ஓமலூரில் கையெழுத்து இயக்கம்

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் தலைமையில் ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றோா்.
சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் தலைமையில் ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றோா்.

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் உத்தரவின்படி, அக்கட்சியின் இளைஞா் அணி சாா்பில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட தமாகா இளைஞா் அணி சாா்பில் ஓமலூா் பேருந்து நிலையம் அருகில் பந்தல் அமைத்து, கள்ளச்சாராய ஒழிப்பு, போதை ஒழிப்பு, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது, மதுவால் ஏற்படும் தீமைகள் ஆகியவற்றைக் கொண்ட பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கையெழுத்து பெற்றனா்.

நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் மணிகண்டன் வரவேற்புரை ஆற்ற, இளைஞரணி மாவட்டத் தலைவா் சஜி முன்னிலை வகித்தாா். மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் ரகு நந்தகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு மாவட்ட தலைவா் சுசீந்திரகுமாா் கையெழுத்து முகாமைத் தொடங்கி வைத்து, காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து, தமாகா கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் துணை அமைப்பு தலைவா்கள் ராஜேந்திரன், பிரகாஷ், அஜித்குமாா், வட்டாரத் தலைவா் சாம்ராஜ், நகர பொருளாளா் முத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com