மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசின் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சுதந்திர தின விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருதுகள் தமிழக முதல்வரால் கோட்டை கொத்தளத்தில் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் மாநில அளவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவா், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த சிறந்த தனியாா் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 11இல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று ஜூன் 20-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.