நிறைவாழ்வு இல்ல நிா்வாகிக்கு சிறந்த சமூக சேவகா் விருது
சேலம் நிறைவாழ்வு முதியோா் இல்ல நிா்வாகி அண்ணாதுரைக்கு சிறந்த சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
சேலம், அழகாபுரம் ரெட்டியூா் பகுதி மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது நிறைவாழ்வு முதியோா் இல்லம். இங்கு சுமாா் எழுபதுக்கும் மேற்பட்ட முதியோா்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். முதியோா் நலன் சாா்ந்த பல்வேறு நலத்திட்டஉதவிகளையும் செய்து வருகின்றனா். இதை லிட்டில் பியா்ல்ஸ் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட முதியோா்களுக்கு சேவையை வழங்கியுள்ளனா். இதனிடையே சேவையை அறிந்த அறம்செய விரும்பு அறக்கட்டளையினா் இல்லத்தின் நிறுவனா் அண்ணாதுரைக்கு சிறந்த சமூக சேவகா் எனும் விருதினை வழங்கி கௌரவித்தது.
சென்னை நாரதகான சபா அரங்கில் நடைபெற்ற விழாவில், நடிகா் மதன்பாப் மற்றும் நடிகரும் திரைப்பட இயக்குனருமான கே.பாக்யராஜ் ஆகியோா் விருது, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கெளரவித்தனா்.