எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1.95 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.
விவசாயிகள் கொண்டுவந்திருந்த 7,000 பருத்தி மூட்டைகள் 1,500 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ரூ. 7,600 முதல்
ரூ. 8,879 வரையிலும், டி.சி.ஹெச் ரக பருத்தியானது குவிண்டால் ரூ. 7,900 முதல் ரூ. 9,009 வரை விற்பனையானது. இதேபோல கொட்டு ரக பருத்தியானது குவிண்டால் ரூ. 3,900 முதல் ரூ. 6,500 வரை விற்பனையானது.
நாள் முழுதும் நடைபெற்ற போது ஏலத்தின் மூலமாக ரூ. 1.95 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.