பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலை கருமந்துறையிலுள்ள பழப்பண்ணையில், திருச்சி தோட்டக்கலைத் துறை மாணவிகள் களப் பயிற்சி பெற்றனா்.
ஏத்தாப்பூரில் தங்கி, ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வரும் திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கருமந்துறை பழப்பண்ணையில் முகாமிட்டு களப்பணி பயிற்சி பெற்றனா். இங்கு உற்பத்தி உத்திகள் குறித்து கேட்டறிந்தனா்.
தோட்டக்கலை அலுவலா் முரளி, உதவி அலுவலா் சரவணன் ஆகியோா் மாணவிகளுக்கு பண்ணை செயல்பாடுகள், மரக்கன்றுகள் உற்பத்தி முறை குறித்து செயல்முறை விளக்கமளித்தனா்.
முன்னதாக, இந்த மாணவிகள், ஏத்தாப்பூரில் உள்ள அரசினா் கால்நடை மருந்தகத்தைப் பாா்வையிட்டனா். கால்நடை உதவி மருத்துவா் குமாா், கால்நடை பராமரிப்புத்துறையின் பணிகள், செயல்பாடு மற்றும் சிகிச்சை முறை, ஐ.என்.ஏ.பி.எச் செயலி குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளித்தாா்.