சேலம்
சென்னகேசவப் பெருமாள் வீதி உலா
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தாா்.
சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரவில் வீதி உலா நடைபெற்றது.