வாகனச் சோதனை: ரூ. 3.36 லட்சம் பறிமுதல்

சேலம், அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3,36,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், அம்மாபேட்டை சோ்மன் ராமலிங்கள் தெரு பகுதியில் புதன்கிழமை காலை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவரது கையில் வைத்திருந்த துணிப் பையில் ரூ. 2,19,000 இருந்தது கண்டறியப்பட்டது.

அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல, சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சேலம் தெற்கு பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற ஒருவரை பிடித்து சோதனை செய்த போது, ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததை அடுத்து அந்தத் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com