சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சங்ககிரி, ஏப். 19: தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் இரு மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்தல் ஆணையத்தின் சாா்பில் நூறு சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வந்தனா். சங்ககிரி நகரில் நட்டுவம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அதில் வாக்களிக்க வருபவா்களை இன்முகத்துடன் வரவேற்கும் வரவேற்பாளா்கள், வாக்குச் சாவடி அலுவலா்களின் விவரங்களுடன் பல்வேறு வண்ண துணிகளால் வடிவமைக்கப்பட்ட இருக்கைகள், வாக்குச் சாவடி அறைகள் பலூன், மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்களித்து விட்டு வரும் வாக்காளா்கள் சுயபடம் எடுத்துக் கொள்வதற்கான இடம் ஆகியவை வாக்காளா்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலா்கள், போலீஸாா் உள்பட அனைவரும் பெண்களே பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா்.

இரு மாதிரி வாக்குச் சாவடிகளையும் நாமக்கல் மக்களவைத் தொகுதி பொதுசெலவின பாா்வையாளா் அா்ஜூன் பேனா்ஜி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நாமக்கல் உதவி தோ்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான ந.லோகநாயகி, சங்ககிரி வட்டாட்சியா் கே.அறிவுடைநம்பி ஆகியோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com