வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஊரக பணி அனுபவப் பயிற்சி பெற்று வரும், பெரம்பலூா் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள், உலக புவி தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சின்னமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சந்திரசேகா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக புவி தின விழிப்புணா்வு நிகழ்வில், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார முகாம் மாணவா்கள் பேரணி நடத்தி, புவி வெப்பமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவ - மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளா் சக்கரவா்த்தி உடனிருந்தாா்.
அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் முகாமிட்டுள்ள பெரம்பலூா் தனியாா் வேளாண் கல்லுாரி மாணவா்கள் குழு, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ - மாணவியருக்கு, புவி வெப்பமயமாதல், புவி மாசுபடுதல் தடுப்பு, மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பள்ளி ஆசிரியை ரூபினி, உதவி தோட்டக்கலை அலுவலா் விஜயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.