சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சித்ரா பெளா்ணமியையொட்டி, அங்காளம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்கக் கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த பக்தா்கள் அம்மனை குடும்பத்துடன் வழிபட்டனா்.